மைசூர் மழை

மைசூர் மழையில் காத்த இயேசு!

இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!

-கெர்சோம் செல்லையா.

மைசூர் மழையில் காத்த இயேசு!

மைசூர் மழையில் காத்த இயேசு!

இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, cloud, house, tree, outdoor and nature
Image may contain: tree, plant, outdoor and nature
LikeShow More Reactions

Comment

ஆல் விழுந்த காட்சி கண்டு,

ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும், 
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, outdoor and nature

யார் மூத்தவர்

யார் மூத்தவர்?

பேரரே பாட்டர்க்கு மூத்தவரென்று,
பெருமையில் பேசும் ஆரியரே,
சேரரும் சோழரும் தோன்றிடு முன்பு,
சென்றவர் பாண்டிச் சீரியரே!
நீரதைத் தோண்டி நிலத்தைப் பிளப்பின்,
நேர்மை எதுவெனத் தெரிவீரே.
யாரெமை ஆண்டால் எமக்கொன்றுமில்லை
என்கிற தமிழரைப் புரிவீரே!

-கெர்சோம் செல்லையா.

வெள்ளை நிறத்தில் கல்லறைகள்!

வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!

எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, sky, outdoor, nature and water
LikeShow More Reactions

Comment

வீணாக்காமல் உதவுவோம்!

வீணாக்காமல் உதவுவோம்!

பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்
காண்பீர் என்றால், நாம் தேடோம்.
கொட்டிடும் உணவைக் கொடுப்பீரென்றால்,
கொஞ்சங் கூட நாம் கொடோம்.
விட்டிடுவோம் இந்த கெட்ட வாழ்க்கை;
வீணாக்காது உதவிடுவோம்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment