மைசூர் மழையில் காத்த இயேசு!
இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
மைசூர் மழையில் காத்த இயேசு!
இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!
-கெர்சோம் செல்லையா.
மைசூர் மழையில் காத்த இயேசு!
இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!
-கெர்சோம் செல்லையா.
ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.
யார் மூத்தவர்?
பேரரே பாட்டர்க்கு மூத்தவரென்று,
பெருமையில் பேசும் ஆரியரே,
சேரரும் சோழரும் தோன்றிடு முன்பு,
சென்றவர் பாண்டிச் சீரியரே!
நீரதைத் தோண்டி நிலத்தைப் பிளப்பின்,
நேர்மை எதுவெனத் தெரிவீரே.
யாரெமை ஆண்டால் எமக்கொன்றுமில்லை
என்கிற தமிழரைப் புரிவீரே!
-கெர்சோம் செல்லையா.
வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!
எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.
-கெர்சோம் செல்லையா.
வீணாக்காமல் உதவுவோம்!
பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்
காண்பீர் என்றால், நாம் தேடோம்.
கொட்டிடும் உணவைக் கொடுப்பீரென்றால்,
கொஞ்சங் கூட நாம் கொடோம்.
விட்டிடுவோம் இந்த கெட்ட வாழ்க்கை;
வீணாக்காது உதவிடுவோம்.
-கெர்சோம் செல்லையா.