மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?

மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
இறைவாக்கு: லூக்கா 2:15-17.

15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

இறைவாழ்வு:
கேட்டவர் சென்று கண்டறிந்தார்;
கிறித்து பிறந்ததை நன்கறிந்தார்.
நோட்டம் விட்டவர் செல்லாமல்,
நொடிந்தோர் மகிழ நன்குரைத்தார்.
ஓட்டைப் பானை ஒழுகுதல்போல்,
ஒரு பயனில்லா நம் வாழ்வில்,
மீட்பரைக் கண்டு நாம் உரைப்போமா?
மேய்ப்பரின் வழியில் சிறப்போமா?
ஆமென்.

Image may contain: outdoor, nature, water and text
LikeShow More Reactions

Comment