கைகள் குவிக்கின்றோம்!

கைகள் குவிக்கின்றோம்!

காட்டுத் தீயில் மாட்டிக்கொண்ட
காளையர் கன்னியர் மாணவரே,
ஏட்டுச் சுரைக்காய் என்றாகாது,
எட்டா மலைமேல் போனவரே.
மீட்டுக் கொள்ள வழியறியாது,
மிரண்டு கீழே தவிக்கின்றோம்;
ஆட்டுவிக்கும் ஆண்டவர் காப்பார்;
அனைவரும் கைகள் குவிக்கின்றோம்!
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment