யார் தந்தார் விடுதலை?

யார் தந்தார் விடுதலை?

யார் இவர் என்று தெரியவில்லை;
இவரது எண்ணமும் புரியவில்லை.

நேர்மையாக நாம் நோக்கின்,
நிகழ்ந்தவை உண்மை, வேறில்லை

பார், இதோ விடுதலை என்றவர்கள்,
பசித்தவருக்குத் தரவில்லை.

தேர்தலில் வென்று சென்றவர்கள்,
தொண்டு செய்யவே வரவில்லை!

-கெர்சோம் செல்லையா.

-3:45

524,699 Views

ஆய்வோம் இறைவாக்கை!

எண்ணி ஆய்வோம் இறைவாக்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா:1:29
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
வாக்கின் விளக்கம் புரியாமல்,
வருத்தம் கொள்வோர் நாமென்றால்,
நோக்கிப் பார்ப்போம் மரியாளை,
நொடியில் கலக்கம் நீங்கி விடும்.
ஏக்கம் எதுவும் கொள்ளாமல்,
இறையின் வாக்கை ஆய்ந்திட்டால்,
தாக்கும் வருத்தம் தவிடாகும்;
தருவார் வாழ்த்து, வாங்கி எடும்!
ஆமென்.

No automatic alt text available.