எந்த சமயமோ…..

Image may contain: 21 people, crowd and outdoor

இறைவனின் பிள்ளை எங்குண்டு?

அந்தணர், வீரர், வணிகர், சூத்திரர்;
அப்படிப் பிரித்தவர் சிலருண்டு.
வந்தவர் உயர்ந்தவர், என்றிவர் தாழ்ந்து,
வாழ்வை இழந்தவர் பலருண்டு.
இந்தியர், ஆரியர், திராவிடர், தமிழர்
என்று பிரிப்பவர் இங்குண்டு.
எந்த சமயமோ, இனமோ, மொழியோ,
இறைவனின் பிள்ளை எங்குண்டு?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 21 people, crowd and outdoor