கறுப்பாடு!

கறுப்பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ‘ என்றார்.68 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை’ என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).”
நற்செய்தி மலர்:
மறுத்துரைத்த பேதுரு போன்று,
மாபெரும் தவற்றைச் செய்கின்றோம்;
வெறுத்து இயேசு கைவிடவில்லை;
விரும்பி ஏற்க, உய்கின்றோம்.
பொறுத்து நாமும் அமைதிகொண்டு,
பொய்யருக்காக வேண்டிடுவோம்;
கறுத்துபோன ஆடுகள் மீளும்;
கடவுளின் அருஞ்செயல் கண்டிடுவோம்!
ஆமென்.

No automatic alt text available.