பார்வையற்றோர் படுந்துயர்…

பார்வையற்றோர் படுந்துயர்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:46-48.
“இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ‘ இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ‘ தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.”
நற்செய்தி மலர்:
பார்வை அற்றோர் படுந்துயரைப்
பார்வை யுற்றோர் பாராமல்,
நேர்மை யுற்றோர் எனவுரைத்தால்,
நேரில் தெய்வம் காணாரோ?
கூர்மையுற்ற அறிவுத் திறனைக்
கொடுத்துதவும் நல்லிறைவன்,
ஆர்வத்தோடே அவர்க்குதவ,
அன்பில் வந்து பேணாரோ?
ஆமென்.

(இப்படத்தில் இருப்பவர் எனது அக்காளின் இசைப்பயிற்சி ஆசிரியர் திருவட்டாறு ஆறுமுகம் பிள்ளை அவர்களாவார். கர்நாடக இசையில் பல பாடல்கள் எழுதி, கற்றுக்கொடுத்த இவர், சில ஆண்டுகள் எங்கள் திருவட்டாறு கிறித்து இல்லத்திலும் தனித்து வந்து, கற்றுக் கொடுத்தது, எங்கள் பேறாகும்.)

Image may contain: 1 person , indoor
LikeShow More Reactions

Comment