புளித்த மாவைப்போன்று…


​புளித்த மாவைப்போன்று…

நற்செய்தி மாலை: மாற்கு 8:14-15.
“சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ‘ பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”
நற்செய்தி மலர்:
கொஞ்சம் புளித்த மாவு போதும்;
கூடை முழுதும் புளிப்பாய் மாறும்.
நஞ்சினளவும் அதுபோல் போதும்;
நல்லுயிர் போகும், உடலும் நாறும்.
அஞ்சும் கொடிய தீவினை பாரும்;
அதின் தொடக்கம் சிறிதேயாகும்.
கெஞ்சி நிற்கும் இறைமுன் வாரும்;
கேடுகள் யாவும் வேருடன் போகும்!
ஆமென்.