விளம்பரம் செய்யா இறைவன்!


​விளம்பரம் வேண்டாம்!

நற்செய்தி மாலை: மாற்கு :7:36-37.
“இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ‘ என்று பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
நன்றாய்ச் செய்யும் நமது தெய்வம் 
நடுவில் விளம்பரம் செய்வதில்லை!
என்றறியாதோர் எதையோ செய்தும்,
எவரும் இன்று உய்ததில்லை!
அன்றைய அடியார் செய்தது பார்ப்போம்;
அவரில் தன்னலம் தெரியவில்லை.
இன்றைய விளம்பர ஊழியர் பார்ப்போம்;
ஏன் வந்தார் எனப் புரியவில்லை!
ஆமென்.