வேண்டாம் கூச்சல்!


​வேண்டாம் கூச்சல்!

நற்செய்தி மாலை: மாற்கு 7:31-35.
“மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘ எப்பத்தா ‘ அதாவது ‘ திறக்கப்படு ‘ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”
நற்செய்தி மலர்:
ஏக்கப் பெருமூச்சுகூட 
இறையின் அடியை எட்டிடுதே.
ஏன் போடுகின்றீர் கூச்சல்?
இதனால் அடியும் கிட்டிடுதே!
ஊக்கத்துடன் ஊழியம் என்றால்,
உள்ளம் திருந்தி வந்திடுமே.
உதவாத ஓசை வேண்டாம்;
ஊரில் அமைதி தந்திடுமே!
ஆமென்