மாற்று இனத்தவரும் மனிதரே!


​நாய்களாய்ப் பார்த்த காலம் அது!

நற்செய்தி மாலை: மாற்கு 7:27-30.

“இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார். அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று’ என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.”
நற்செய்தி மலர்:
வேற்று இன மொழி மக்களை நாயாய்
வெறுத்தவர் வாழ்ந்த காலம் அது.
போற்றுதலுக்கு உகந்தவர் தாயாய்
பொறுமையில் உணர்த்திய காட்சி இது.
தோற்று போக வைக்கும் வெறியால்
தொல்லை அன்றி, நன்மை எது?
மாற்றுகின்ற மனிதர் வாழ்வார்;
மடமை ஒழிக்கச் சங்கூது!
ஆமென்.