அவனும் உண்டான் காய்-கனி-இலை!

அவன் உண்டதுவோ காய்-கனி- இலை!
நற்செய்தி மாலை: மாற்கு 7:17-19.
“அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், ‘ நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது’ என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.”

நற்செய்தி மலர்:
உண்ணுவதாலே குறையுமில்லை;
உண்ணாதவரில் நிறையுமில்லை!
பண்ணும் தீமை உணவால் இல்லை;
பலபேர் இதனை உணரவுமில்லை!

அண்ணன் காயீன் செய்தான் கொலை;
அவன் உண்டதுவோ காய்கனி இலை!
எண்ணிப் பார்ப்பீர் ஏழையர் நிலை;
இறைவன் கேட்கிறார், பகிருதலை!
ஆமென்.