மாசு பிறக்கும் இடம்!

அள்ளும் மாசு பிறக்கும் இடம்!
நற்செய்தி மாலை: மாற்கு 7;14-16.
“இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ‘ நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். ( ‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’ ) என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கள்ளும் புகையும் கெடுதல் என்று,
கருத்தாய்ப் பாடல் பாடுகிறோம்.
உள்ளே போகும் உணவிலும் நஞ்சு
உண்டு என்று போடுகிறோம்.
அள்ளும் மாசு பிறக்கும் இடமோ,
அகமென மறந்து ஆடுகிறோம்.
துள்ளும் மனிதர் தூய்மை அடைவார்;
தெய்வ வாக்கைத் தேடுகிறோம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment