எப்போதும் பணியா?

நற்செய்தி மாலை: மாற்கு 6:30-32.
“திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ‘ நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ‘ என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
எப்போதும் பணியே என்றிருந்தால்,
எவராய் இருப்பினும் சோர்புறுவார்.
அப்போதறிந்த ஆண்டவனார்,
அடியரை ஓய்வில் அனுப்புகிறார்.
இப்போதிதனை நாம் உணர்ந்தால்,
ஏற்படும் தோல்விகள் குறைவாகும்;
தப்புத் தவறுகள் ஓய்வெடுக்கும்;
தந்தையின் திட்டமும் நிறைவாகும்!
ஆமென்.

தமிழில் நற்செய்தி's photo.