நலம் வாழ விரும்பும் இறை

​நற்செய்தி மாலை: மாற்கு 6:12-13.

“அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.”

நற்செய்தி மலர்:

எண்ணில் அடங்கா எளியவர் இன்று

எண்ணெய் மருந்தென ஏங்குகிறார்.

கண்ணில் தெரியா மருத்துவர் இறைதான்

கைவிட்டோரைத் தாங்குகிறார்.

பண்ணில் எழுதிய பாடலைப் பாடி,

பணி முடிப்பதாய்க் கொள்ளாதீர்.

விண்ணின் விருப்பாம் நலம் வழங்கல்

வேலையை விலக்கித் தள்ளாதீர்!

ஆமென்.