காலின் தூசு சான்றுரைக்கும்!

காலின் தூசும் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:10-11.
“மேலும் அவர், ‘ நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ‘ என்று அவர்களுக்குக் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நூலினைப் பார்த்து நிற்போரே,
நுண்மதி பெற்றிடக் கற்பீரே.
பாலினையொத்தத் திருவாக்கைப்
பருகி, மகிழ்வு சேர்ப்பீரே.
ஆலினைப் போன்று வளர்ந்துவரும்
ஆண்டவர் அரசைப் புறக்கணிப்பின்,
காலினில் ஒட்டிய தூசெழும்பிக்
கடுஞ்சான்றுரைக்கத் தோற்பீரே!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.