நன்மை விதைப்போம், வாரும்!


​நன்மை விதைக்க வாரும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:30-32.

“மேலும் அவர், ‘ இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
ஒன்றுமில்லை என்று,
ஒளிந்திருந்தேன் நானும்;
இன்று காணும் யாவும்,
இறையின் ஈவு ஆகும்.
தொன்று தொட்டு தெய்வம்,
தொகுக்கும் செயலைப் பாரும்.
நன்று என்று கொண்டு,
நன்மை விதைக்க வாரும்!
ஆமென்.