மண்ணைத் தேடுகிறார்….

​மண்ணைத் தேடுகிறார்….

நற்செய்தி மாலை: மாற்கு 4:10-12

“அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், ‘ இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கண்ணிருந்தும் காணார்;
காதிருந்தும் கேளார்.
மண்ணைத் தேடுகிறார்;
மண்ணாகி, வாழார்.
எண்ணம் பெருத்திட்ட 
இவர்களுமே மீள்வார்;
விண்ணின் வேலையிது;
விடுதலையில் ஆள்வார்!
ஆமென்.