பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே!

பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே!
நற்செய்தி மாலை: 4:10
 “அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
பாதையும் பாறையும் முட்காடும்,
பயிர்விளை நிலமாய் மாறட்டுமே.
பேதையும் மூடரும் அறிவுபெறும்,
பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே.
வாதையும் தீமையும் ஒழிந்துவிடும்,
வாய்மையின் ஆவி பொழியட்டுமே.
ஏதெனத் தெரியா ஏழையரும்,
இயேசுவைப் பார்த்து வாழட்டுமே!
ஆமென்.