நல்ல நிலமாய் நானும் திகழ……

​நல்ல நிலமாய் நானும் திகழ…

நற்செய்தி மாலை: மாற்கு 4:8

“ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.”
நற்செய்தி மலர்:
நல்ல நிலமாய் நானும் திகழ,
நன்றாய் என்னை உருமாற்றும்.
வல்ல ஆவி மழையை அனுப்பி,
வறண்ட என்னில் அருளூற்றும்.
இல்லை உரங்கள் எனாதவகையில்,
இயற்கை வளத்தை நீர் புதையும்.
சொல்ல இயலா அளவில் விளைய,
சொல்லாம் விதையை எனில் விதையும்!
ஆமென்.