யார் முதலில் வணங்கவேண்டும்?

​வணக்கம், வாழ்த்துகள்!

சிறியோர்தான் பெரியோரை முதலில் வணங்க வேண்டும் என்ற ‘சிந்தை’ கொண்ட நாடு, நம்நாடு. ஆனால், வருபவர்தான் முதலில் வணங்க வேண்டுமென்று, அரேபியப் பண்பு எனக்குக் கற்றுத் தந்தது. கிறித்தவத் திருமறையோ, “கனம் பண்ணுவதில், முந்திக் கொள்ளுங்கள்” என்றுகூறி, சிறியவர்-பெரியவர் வேறுபாடு எண்ணாது,முதலில் வணங்கச் சொல்கிறது. கிறித்துவும் தமது அடியாரை முந்திக்கொண்டு வாழ்த்தியதை யோவான் நற்செய்தியில் (20-ஆம் அதிகாரத்தில்) பார்க்கிறோம். இப்படி வாழ்த்தி வணங்குபவர்கள் இன்றும் உண்டு. இருப்பினும், இந்தப் பண்பு, இயேசுவின் அடியாரிடம் இன்னாளில் குறைந்தே வருகிறது!
நன்றி, நல்வாழ்த்துகள்.