இரங்கி வேண்டுவோம்!

இரங்கி வேண்டுவோம்!
இப்படி வாழக் கூடாதென்று,

இயேசுவின் பெயரில் உரைத்திட்டால்,
அப்படி வாழ்ந்து காட்டும் எவரும்
அறிவில்லார் எனத் திட்டுகிறார்!
எப்படி இவரும் மீட்பைப் பெறுவார்,
என்றே இரங்கி வேண்டிட்டால்,
முப்படி அளக்கும் மும்மை இறையால்,
முட்டாள்தனத்தை விட்டிடுவார்!
ஆமென்.