இயேசுவை இவர்கள் புரியலையே!

அவர்கள் இயேசுவை அறியலையே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:6
“உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
நற்செய்தி மலர்:
நன்மை செய்யும் இடங்களிலே,
நன்றி உள்ளோர் தெரியலையே.
இன்ப வாழ்வை ஈகையிலே,
இயேசுவை எவரும் புரியலையே.
என்ன உரைத்தும் பலனிலையே.
இடம் வலம் வேறென அறிவிலையே.
சொன்ன வாக்கு பலிக்கயிலே,
சூழும் வெட்கம், இவர் மேலே!
ஆமென்.