சோதனைப் பாடும் வருவதுண்டு.

நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.