கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…

 

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,
இறையுள் இணையும், ஓட்டிடுவோம்.
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்
திறமை ஒழியும், தாண்டிடுவோம்.
ஆமென்.
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்...<br />
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.<br />
"இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்."<br />
நற்செய்தி மலர்:<br />
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்<br />
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.<br />
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,<br />
இறையுள் இணைந்து ஓட்டிடுவோம்.<br />
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,<br />
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!<br />
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்<br />
திறமை ஒழிய வேண்டிடுவோம்.<br />
ஆமென்.
Like ·  · Share

நலம் தரும் இயேசு!

நலம் தரும் இயேசு!

நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.

“மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.”
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.
 
நலம் தரும் இயேசு!
நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.
"மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை."
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.
Like ·  · Share

சேயினைப் போன்று பற்றிடுவோம்!

நற்செய்தி மாலை: மாற்கு 1:29-31.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்:
“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.”
நற்செய்தி மலர்:
ஆயிரம் கோடிகள் சேர்த்தாலும்,
அத்துடன் பொன் பொருள் கோர்த்தாலும்,
நோயினில் ஒருவர் விழுந்துவிட்டால்,
நொந்தே போகிறார், பாருங்களே!
தீயினில் விழுந்து துடிப்பதுபோல்,
தேம்பி அழுதலை விட்டுவிட்டு,
சேயினின் கைகள் தேடுதல்போல்,
தெய்வம் பற்றிட வாருங்களே!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:29-31.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்:
"பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்."
நற்செய்தி மலர்:
ஆயிரம் கோடிகள் சேர்த்தாலும்,
அத்துடன் பொன் பொருள் கோர்த்தாலும்,
நோயினில் ஒருவர் விழுந்துவிட்டால்,
நொந்தே போகிறார், பாருங்களே!
தீயினில் விழுந்து துடிப்பதுபோல்,
தேம்பி அழுதலை விட்டுவிட்டு,
சேயினின் கைகள் தேடுதல்போல்,
தெய்வம் பற்றிட வாருங்களே!
ஆமென்.

இப்படி எவரும் பேசவில்லை!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28.
“அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ‘ இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ‘ என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.”
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28. 
"அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது."
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை! 
ஆமென்.
Like ·  · Share
  • நற்செய்தி மாலை
  •  

தீயோன் ஓடுதல் பார்!

தீயோன் ஓடுதல் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 – 26.
” வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ‘ என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.”
நற்செய்தி மலர்:
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;
உண்மை இதுவே புரிந்திடுவோம்.
 
என்றும் தீயோன் நமை வெல்லான்;
இயேசு முன்னர் அவன் நில்லான்.
 
இன்று நம்மை ஆட்டுவிக்கும், 
இழிந்த பேயும் மாட்டிவிடும்.
 
தொன்று தொட்டு இது உண்மை;
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!
ஆமென்.
தீயோன் ஓடுதல் பார்!<br />
நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 - 26.<br />
'' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று."<br />
நற்செய்தி மலர்:<br />
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;<br />
உண்மை இதுவே புரிந்திடுவோம்.</p>
<p>என்றும் தீயோன் நமை வெல்லான்;<br />
இயேசு முன்னர் அவன் நில்லான்.</p>
<p>இன்று நம்மை ஆட்டுவிக்கும்,<br />
இழிந்த பேயும் மாட்டிவிடும்.</p>
<p>தொன்று தொட்டு இது உண்மை;<br />
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!<br />
ஆமென்.
Like ·  · Share

தீயோன் அறிவான்,

நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.<br />
"அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது".<br />
நற்செய்தி மலர்:<br />
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,<br />
தெய்வ மைந்தன் இயேசென்று.<br />
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,<br />
நிலையை இங்கு பாரின்று!<br />
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,<br />
பிழை உணர்வாய், இது நன்று.<br />
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,<br />
சிறக்கும் தெய்வப் பணி வென்று!<br />
ஆமென்.
Like ·  · Share

 

தூக்கிட வலுவாம் வாக்கினையே,

நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.

“அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.”
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
"அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்."
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.
Like ·  · Share

எதை விட்டோம், இயேசுவிற்காக?

 

எதை விட்டோம், இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.
“பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.”

நற்செய்தி மலர்:
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.
அதனால் அவரும் அடியார் ஆனார்.
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!
ஆமென்.

எதை விட்டோம், இயேசுவிற்காக?<br />
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.<br />
"பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்." </p>
<p>நற்செய்தி மலர்:<br />
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;<br />
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.<br />
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;<br />
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.<br />
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.<br />
அதனால் அவரும் அடியார் ஆனார்.<br />
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,<br />
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!<br />
ஆமென்.
Like ·  · Share
  • நற்செய்தி மாலை

    Write a comment…

மாய்மை வலையில் விழுந்தவரை…..

 

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.

முதல் சீடர்களை அழைத்தல்:
“அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.”

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.
முதல் சீடர்களை அழைத்தல்:
"அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்."

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித் 
தூரம் விலகிய மீனவரை 
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான, 
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மாய்மை வலையில் விழுந்தவரை, 
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.
LikeLike ·  · Share

திருந்தத் தேவை இல்லை

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
“யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ‘ காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ‘ என்று அவர் கூறினார்.”

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று,
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
"யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்."

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று, 
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி 
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.
LikeLike ·  · Share