அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …
Day: September 26, 2014
பாவமும் வேண்டாம், பழியும் வேண்டாம்!
நற்செய்தி: மத்தேயு 27:25-26.
“அதற்கு மக்கள் அனைவரும், ‘ இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் ‘ என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.”
நல்வாழ்வு:
இப்படிச் சொல்லி பழியை ஏற்ற
தப்பித மக்களை நீரறிவீர்.
முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னர்,
எப்படி அழிந்தார் எனத்தெரிவீர்.
அற்புதமாக நமைத் திருத்த
பொற்பரன் காலடி வந்திடுவீர்.
சொற்படி தீர்ப்பு வழங்கும் இறையுள்
நிற்பவராக வாழ்ந்திடுவீர்!
ஆமென்.