எரேமியாவின் வாக்கும் இயேசுவின் வாழ்வும்

முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.”

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

Photo: முன்னுரைத்த வாக்கு!

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
 "இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது."

இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு, 
நிம்மதி வழங்க வருபவரை 
விலை மதிப்பு அறியாதவரோ 
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும் 
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.

காட்டு விலங்கும் நாட்டு மனிதனும்

நல்வாக்கு: மத்தேயு 27:6-8.
“தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ‘ இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ‘ என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ‘ இரத்த நிலம் ‘ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.
“நல்வாழ்வு:
காட்டில் வாழும் விலங்குங்கூட
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.
நாட்டின் நடைமுறை இதுதானென்று
நானுமிருந்தது என் தவறே.
வீட்டில் இதனைக் காணும்போதோ,
விழுந்தழுதேன், என் இறையே!
ஆமென்.
Photo: நல்வாக்கு: மத்தேயு 27:6-8.<br /><br /><br />
"தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது."</p><br /><br />
<p>நல்வாழ்வு:<br /><br /><br />
காட்டில் வாழும் விலங்குங்கூட<br /><br /><br />
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.<br /><br /><br />
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்<br /><br /><br />
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.<br /><br /><br />
நாட்டின் நடைமுறை இதுதானென்று<br /><br /><br />
நானுமிருந்தது என் தவறே.<br /><br /><br />
வீட்டில் இதனைக் காணும்போதோ,<br /><br /><br />
விழுந்தழுதேன், என் இறையே!<br /><br /><br />
ஆமென்.