யாருக்குக் கொடுக்கிறோம்?

இவர்களுக்கிரங்கும் இறைவன் உண்டு;
இயேசுவின் அடியார் சொல்வாரா?

சுவர்களின் நடுவில் முழங்கும் வாக்கு,
செயல்பட அவரும் செல்வாரா?

தவறுகள் உணர்ந்து, தம் நிலை அறிந்து,
தாழ்ந்தோர் எழும்பக் கொடுப்பாரா?

எவர் எவருக்கோ எடுத்துக் கொடுத்து,
ஏமாறுவதை விடுப்பாரா?

-கெர்சோம் செல்லையா.

Photo