இணைப்பவர்தாம், ஊழியராம்!

இணைக்கும் இறைப்பணி!
———————————

எளியோர் கடக்கும் இச்சிறு பாலமும்,
இணைக்கும் பணியைச் செய்கிறதே.
ஒளிமயமான இறையுடன் சேர்க்கும்
ஊழியம் பாலம் போன்றதுவே.

தெளிவைக் கொடுக்கத் தேவை எதுவோ,
தெய்வத்தின் ஆவி தந்திடுமே.
வளியாய், நீராய், நெருப்பாய் வந்து,
வழி நடத்தி இணைத்திடுமே!

-கெர்சோம் செல்லையா.

Photo