மூடுவோம் நாம்!

திறந்ததை மூட எவருமில்லை;
தெரிந்தது இவருக்கு வரையும் கலை!
இறந்த பின் தலைக்கு என்ன விலை?
எழுந்து மாற்றுவோம் அவல நிலை!
– கெர்சோம் செல்லையா.
Photo: இந்த தெரு ஓவியத்தை பார்த்தவுடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது. கமெண்டில் எழுதுங்கள்.

என்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?

நல்வாழ்த்து:
முண்டி அடித்துச் செல்வோர் உலகில்
நொண்டிக் கொண்டு நானும் வந்தேன்.
அண்டிக் கொள்ள வேண்டி நின்றேன்;
கண்டு அணைத்தீர்; களிப்பில் புகழ்ந்தேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:19-22.
“இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘ உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘ ஆண்டவரே, அது நானோ? ‘ என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”

நல்வாழ்வு:

என்னுடன் இருப்பவர்கள்
எப்படிப் பட்டவர்கள்?
எனக்குத் தெரியவில்லை;
இது என் அவல நிலை!
பொன் பொருள் காசிற்கு,
போட்டுக் கொடுப்பவர்கள்
புகழும் உரைச் சொல்லை
புரிந்திட இயலவில்லை!
இன்முகம் இது என்று
எண்ணம் கொண்டின்று
ஏமா றுகிறேன் நான்;
இதை நீர் அறிந்தவர்தான்!
வன்மை வஞ்சங்கள்
வளைக்கும் உலகினிலே,
வாழ்ந்திட விரும்புகிறேன்;
வாக்கைத்தான் நம்புகிறேன்!
ஆமென்.