வேளை வந்தது

வெறுமனே திரும்பா வாக்கைக் கேட்போம்;
விண்ணின் வழியை  விரும்பி ஏற்போம்!

நல்வாழ்த்து:

மறை பொருள் வெளிப்படும் காலத்திலே,
மைந்தனின் வாக்கு பலிக்கையிலே,
குறையுள்ள என்னைப் பார்ப்பவரே,
கொடுத்தேன் நெஞ்சை ஏற்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 26:17-18
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்:
“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘ எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ‘ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ‘ என்றார்.இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”
நல்வாழ்வு:
ஒவ்வொன்றிற்கும் நேரம் குறித்து,
உமது விருப்பை நிறைவேற்றும்.
எவ்வகை இன்னல் எதிர்வந்தாலும்
இயேசு வழியில் முறியடியும்.
செவ்வை வழியை விடாதிருக்கச்
சிறிய என் கை பிடித்தருளும்.
அவ்வித வாழ்வே எனக்குப் போதும்,
அதுதான் எனக்குப் பேரின்பம்!
ஆமென்.

கடன்பட்டார்!

அன்புக் கடனா?
காசைக் கடனாய்க் கொடுத்துவிடு;
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!

தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!

-கெர்சோம் செல்லையா.

Photo: Try to follow - Bency