நல்ல செய்தி

அறிவைத் தருவது நற்செய்தி;

அதன்படி நடப்பின் உயிர்மீட்சி!

நல்வாழ்த்து:

இல்லாமை நீக்கிட இறைவா வாரும்.
எளியனின் நெஞ்சில் நேர்மை தாரும்.
பொல்லாத உலகின் பொய்மை போக்கும்;
போற்றிப் புகழ்வேன், தூய்மை ஆக்கும்!

நல்வாக்கு: மத்தேயு 26:6-9.
பெண் ஒருவர் நறுமணத் தைலம் ஊற்றுதல்:

“இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே ‘ என்றார்கள்.

நல்வாழ்வு:
இறைவனுக்குரியதை இறைவனுக்கும்,
வறியருக்குரியதை வறியருக்கும்,
குறையின்றிக் கொடுத்தல் அறமாகும்;
நெறிமுறை தெரிதல் அறிவாகும்!
ஆமென்.

மேலோனைப் போற்றி!

மாத்தூர் தொட்டில் பாலம்:

வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!

– கெர்சோம் செல்லையா!

real Beauty of Mathoor :D