இன்றும் கேட்போம் நற்செய்தி!

நல்வாழ்த்து:
அன்பில் வாழ்ந்து இறை புகழ்வோம்;
அறிவை வளர்த்து இறை புகழ்வோம்.
துன்பம் தந்திட வருபவர்க்கும்
நன்மை செய்து நாம் புகழ்வோம்!
நல்வாக்கு: மத்தேயு 25:29-30.
ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.”
நல்வாழ்வு:
இல்லாதிருப்பது வளர்ந்திடுமோ?
என்றும் இல்லை, இவ்வுலகில்.
எல்லாம் வளர வேண்டுமெனில்
இருக்க வேண்டும் அவை முதலில்.
சொல்லால் இயேசு உரைத்தபடி
சொந்தமாக்குவோம் பற்றுறுதி.
நல்லாயனே நிரப்பிடுவார்,
நமது கிண்ணம் வழியும்படி!
ஆமென்.