வானின் செய்தி

வந்தேன் மீண்டும் உம்மிடமே;
வானின் செய்தி கொடுத்திடவே.
தந்தேன் நெஞ்சை இறையிடமே;
தமிழர் மீட்பு அடைந்திடவே!
நல்வாழ்த்து:
விடுதலை அளிக்கும் இறையைப் புகழ்வீர்;
வேண்டும் நன்மை வருவது காண்பீர்.
கெடுதலை வெறுக்கும் நெஞ்சம் ஈவீர்;
கிறித்து அரசில் இடம் பிடிப்பீர்!

நல்வாக்கு:

மத்தேயு 25:14-15.
தாலந்து உவமை

”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”

நல்வாழ்வு:
ஐந்தோ இரண்டோ ஒன்றோ,
அளித்தவர் ஆண்டவரன்றோ?
தந்தவர் விருப்பை எதிர்த்துத்
தவறாய் உழைத்தல் நன்றோ?
எந்த வரம் என்றில்லை.
இங்கு தேவை வாழ்க்கை.
அந்த அறிவு வந்தால்
ஆகாதது ஒன்றில்லை!
ஆமென்.