நாள்தோறும் நற்செய்தி

கடவுளின் வாக்கைக் கேட்போமா?
கவலை நீங்குதல் காண்போமா?

நல்வாழ்த்து:
தேறுதல் இன்றி அலைந்தவனின்
மீறுதல் யாவையும் மன்னித்து,
ஆறுதல் தந்த அருள்வாக்கைக்
கூறுதலே இந்நல்வாழ்த்து!

நல்வாக்கு;
மத்தேயு/Matthew 24:23-25.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.”

நல்வாழ்வு:
கள்ள வாக்கினரும்,
கறையான ஊழியரும்,
அள்ளிச் செல்கின்றார்,
அறியா மந்தையினை.
தெள்ளத் தெளிவு பெற,
திருக்கூட்டம் மீண்டு வர
கொள்ளையானவரைக்
கொணர்வது நம்கடமை!
ஆமென்.