மைந்தனைப் பாரீர்!

இறைவாக்கு: யோவான் 12:44-45.

  1. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
  2. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

இறைவாழ்வு:

தந்தை இறையைப் பார்க்க விரும்பி,
தம் வழி செல்லும் மானிடரீர்,
மைந்தன் இயேசைக் கண்டு, திரும்பி,
மனது கொடுக்க, ஏன் மறந்தீர்?
தொந்திரவான மனிதரில் நிறுத்தி,
தூய்மையை நாடா மானிடரீர்,
எந்திரமான உம் செயல் விருத்தி
அடையுதே தீது; அது துறப்பீர்!

ஆமென்.

கெர்சோம் செல்லையா.