கிறித்தவர் என்று சொல்லுங்கள்!

யோவான் 12:42-43.

இறை வாழ்வு: 

உள்ளில் வந்து உறையும் இறையை,
ஊரார் காணச் சொல்லாமல்.
தள்ளித் தொலைத்த தன் காதலிபோல்,
தயங்கி, மறைப்பவர் கிறித்தவரா?
அள்ளிச் செல்வீர் என்று மயக்கும்,
ஆயிரம் சலுகை பின் செல்லாமல்,
வெள்ளியைப் போல உருக்கும்போதும்,
விண்ணைப் பார்ப்பவர் கிறித்தவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.