இறுதித் தீர்ப்பு!
இறை வாக்கு: யோவான் 12:31-33. 

இறை வாழ்வு:

இறுதித் தீர்ப்பு இறையிடம் உண்டு; 

இன்று வந்தால் அன்பறிவோம்.

குரிசில் சிந்தும் குருதியும் கண்டு 


குளித்தால் மீட்பு, நன்கறிவோம்.

உறுதிப் பற்றில் இணைவார் உண்டு;


உய்யும் வாழ்வு, என்றறிவோம். 

கருதிக் கொண்டு கனியார் கண்டு, 


கருக்கும் நெருப்பு, இன்றறிவோம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.