வெளியே நிற்கின்றார்!

வெளியே நிற்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 2 :1-2.
“சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
எண்ணற்ற மக்கள் வெளியே நிற்கின்றார்;
இயேசுவைக் காண்பதற்கு ஏங்கித் தவிக்கின்றார்.
கண்ணற்று நாமும் கைலாகு கொடாதுவிடின்,
கடவுளின் அரசிற்கு வராது சென்றிடுவார்.
விண்ணற்று இவர்கள் விழுவது இறைவிருப்போ?
வேண்டாம் இத்தவறு, விழித்து எழுந்திடுவீர்.
பண்ணற்ற பாடல் பாடுதல் விட்டு விட்டு,
பாருங்கள் ஏழையரை, பாங்காய் உதவிடுவீர்!
ஆமென்.

Leave a Reply