விளம்பரம் செய்யாதீர்!

விளம்பரம் செய்யாதீர்!
நற்செய்தி மாலை : மாற்கு 1: 42-44.
“உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ‘ இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ‘ என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.”
நற்செய்தி மலர்:
எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்;
இயேசுவின் ஊழியர் புகைப்படங்கள்.
இங்கு இதனால் அவப்பெயர்கள்;
எரிச்சல், போட்டி, பொறாமைகள்.
சங்கு முழக்கும் திருப்பணிக்குச்
சாவின் மணியடி தேவையில்லை.
பொங்கு தவற்றைப் புதைக்காது,
பொய்மை போற்றின், பயனில்லை!
ஆமென்.

Leave a Reply