வரமருளும்!

வரமருளும்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:33-34.
“அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தன்னிலை அறியா மனிதருக்குத் 
தவற்றை உணர்த்தும் வாக்கருளும்.
அன்னியர் என்று அகலாது,
அன்புடன் அணைக்கும் நாக்கருளும்.
என்னிலை யுற்றோர் என்றறிந்து,
எடுத்துச் சொல்லும் திறனருளும்.
முன்னிலே காணும் எளியருக்கு,
முதலில் உதவிட வரமருளும்!
ஆமென்.

Leave a Reply