வன்முறை!

வன்முறை!


வன்முறை என்றும் நன்முறை  அல்ல. 

வாள், தடி, குண்டுகள் கொன்று விடும்.

தன் முறை வரும்வரை பொறுப்பது நல்ல

தன்மையேயென்று சென்று விடும்.

என்முறை தவறிய பேச்சிலும் கூட 

இருக்கிற தீமையை அழித்து விடும். 

பன்முறை கேட்கும் அன்பையே நாட, 

பாவி நெஞ்சைக் கிழித்து விடும்!


-கெர்சோம் செல்லையா.