யோவான் 8:39-40.

நல்வழி:


தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,

தவறு என்று சொல்லேன் நான். 

முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,

முழுவதும் இன்று அறுப்பவன் யான். 

மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,

மனிதருக்கென்ன செய்தேன் நான்?

எந்தையிறையே, என்னைத் தந்தேன்;

இயேசு போன்று நடக்கத்தான்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.