எண்ணும் இறையை எண்ணிப் பாரும்.
எண்ணிப் பார்த்தால் ஒன்றாகும்.
மண்ணில் இறங்கி மனிதம் கூறும்,
மகனும் தந்தையும் ஒன்றாகும்.
விண்ணின் அருளை வேண்டிக் கேளும்;
விந்தைப் பிறவியும் ஒன்றாகும்.
கண்கள் காணா காட்சியை ஆளும்,
கடவுளுக்குள் ஒன்றாகும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.