யோவான் 10:29-30.

எண்ணும் இறையை எண்ணிப் பாரும். 

எண்ணிப் பார்த்தால் ஒன்றாகும். 

மண்ணில் இறங்கி மனிதம் கூறும்,

மகனும் தந்தையும் ஒன்றாகும். 

விண்ணின் அருளை வேண்டிக் கேளும்;

விந்தைப் பிறவியும் ஒன்றாகும். 

கண்கள் காணா காட்சியை ஆளும்,

கடவுளுக்குள் ஒன்றாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.