யார் குற்றம்?

யார் குற்றம்?
வாக்கு: யோவான் 10:22-26.
22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.


வாழ்வு:


நல்லவர் இயேசு, நன்மைகள் செய்தும்,

நம்ப மறுப்பது, யார் குற்றம்?

அல்லவை செய்து, அவற்றைக் கொய்யும்,

ஆணவம் கொண்டார் குற்றம்.

வல்லவர் இறையே, என்று நினைக்கும்,

வழியில் வராதிருப்பதும் குற்றம்.

சொல்கிற அன்புச் செயலே இணைக்கும்.

செய்யாதிருப்பது , நம் குற்றம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.