யார் ஏழை? கேட்டது அன்பு!

யார் ஏழை? கேட்பது அன்பு!

ஈரேழு ஆண்டுகள் முன்பு

ஏழையூர் ஒன்று சென்றோம்.

சீரேசு ஆண்டவர் பின்பு

சிலபேர் வருவது கண்டோம்.

தீராத ஆவல்கள் கொண்டு,

திரும்பவும் அங்கு சென்றோம்.

யாரேழை? கேட்டது அன்பு!

எம் தலை தாழக் கண்டோம்!

-கெர்சோம் செல்லையா.