மாதிரி யார்?

எனக்கு மாதிரி யார்?

இறைவாக்கு: யோவான் 13: 12-15.12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

இறைவாழ்வு:

பாதிரியார் பலர் உண்டு;

பார்க்கிறோமே இன்று.

மாதிரி யார் யாருண்டு?

மறுபடி சொல் நின்று.

தீதளிப்பார் நிலை கண்டு,

திருப்பிடுவாரன்று.

தூதாகச் செயல் கொண்டு,

துணையிருப்பார் நன்று!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா!

All reactions:9Victor Raj, Bhavani Jeeja and 7 others