பாறையுள்ளும் பாயும் ஒளியே!

நல்வாழ்த்து:
ஓடும் வாழ்வின் உண்மை தேடும்;
உணர்வடைந்து இறையைப் பாடும்.
நாடும் நன்மை நம்மை நாடும்;
நம்புவோர்க்கு யாவும் கூடும்!
நல்வாக்கு: மத்தேயு 26:31-32
“அதன்பின்பு இயேசு அவர்களிடம்,”இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில்”ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.”
நல்வாழ்வு:
கல்லாய் நெஞ்சம் மாறுவதாலே,
கடவுளை விட்டுஅகன்றிடலாம்.
சொல்லாம் ஒளிச்சுடர் சூழுவதாலே,
சூது நீங்கிச் சேர்ந்திடலாம்.
எல்லா உறவும் இறையுடன் மகிழ,
எளியோர் நாமும் வேண்டிடலாம்.
நல்லோராக மாற்றும் இறையை
நம்பி நாமும் வாழ்ந்திடலாம்!
ஆமென்.

Leave a Reply