நான்கு நாளான உடல்!

நான்கு நாளான உடல்!

நற்செய்தி: யோவான் 11: 44-45.

44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

45. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

நல்வாழ்வு:

நான்கு நாளாய் அழுகிய உடலும்,
நன்றாய் உயிர் பெறுகிறது.
ஏங்குகின்ற உறவின் முன்பும்,
எழுந்து வந்து நிற்கிறது.
தாங்குகிறவர் இறையென அறியும்,
தகுந்த பற்றே தருகிறது.
தூங்கும் உடல்கள் எழும்பும் காலம்,
துரிதமாகவே வருகிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.