நல்லறிவு!

நல்லறிவு!
நற்செய்தி:  யோவான் 7:14-15.

நல்வழி:


கல்லூரி பள்ளி செல்லார் கண்டு,

கல்லார் என்று சொல்லாதீர். 
பொல்லா வறுமை ஒளிந்துகொண்டு,

புரியும் தவற்றில் நில்லாதீர். 

பல்வகை அறிவு நம்மில் உண்டு;

பயன்படுத்தாமல் செல்லாதீர்.

நல்லதை எண்ணி வாழ்தல் தொண்டு;

நல்லறிவிதனைக் கொல்லாதீர்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.